Saturday, March 16, 2013

என் நேசம்

நான் உன்னை நேசிக்கிறேன்
உன் அருகில் நகைக்கிறேன், மனமகிழ்கிறேன், தன்னம்பிக்கை கொள்கிறேன் என்பதற்காக மட்டும் அல்ல.....

உன் அருகில் என் வலிகளையும் மறந்துவிடுகிறேன் என்பதற்காகவும்






என் துயரங்களுக்கான ஆறுதல் உன் தோள்களில் இருக்க நீயே என் துயரம் கூட்டினால் நான் எங்கு செல்வேன்....

ஆறுதல்

என் காயங்கலுக்கு அலங்காரம் செய்து மறைத்து வைத்திருக்கிறேன்
உன்னிடம் இருந்து மறைபதர்கில்லை
நீ மட்டும் கண்டுகொள்வாய் என்பதற்காக.....
மருந்திடுவாய் என்பதற்காக....
அணைத்து ஆறுதல் சொல்வாய் என்பதற்காக...
கண்களிலி உயிரை வைத்து காத்திருக்கிறேன்
சீக்கிரம் கண்டுகொல்லடா  காயங்கள் வடுவாக  மாருவதற்குள்ளேனும்.

Sunday, October 17, 2010

அன்னை தெரேசா - அன்பின் வடிவம்

அன்னை தெரேசா ஒரு முறை அன்னையின் அரகட்டளைக்காக ஓர் செல்வந்தரிடம் நிதி கேட்க சென்றிருந்தார், அச்செல்வந்தரோ அன்னையின் முகத்தில் காரி உமிழ்து இதுதான் உமக்கான பரிசு என்றார் அன்னை பணிவாய் இது எனக்கான பரிசாக இருக்கட்டும் அரகட்டளைக்காக ஏதேனும் உதவுங்கள் என்றாராம். அச்செல்வந்தர் தன் தவறை உணர்ந்து அந்நாளில் இருந்து எளியவர்க்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வந்தார். அன்னை தெரேசா வாழ்ந்த இந்த நாட்டில் பிறக்க நாம் என்ன தவம் செய்தோம்.

Saturday, July 17, 2010

காதல்

ஒரு மனிதுளியின் நீளம்
கண்டேன் நம் கண்கள்
சந்தித்த வேளையில்.

ஆசை

மனிதன் ஆசையில் சுழல்கிறான்
இவ்வுலகமே அந்தரத்தில் சுழலும்போது